Skip to main content

Posts

Showing posts from October, 2020

சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வமகள் சேமிப்புத் திட்டம்)

                 சுகன்யா சம்ரிதி யோஜனா ( SSY ) என்பது ' பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோ ' இயக்கத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட பெண் குழந்தைக்கான ஒரு சிறிய வைப்புத் திட்டமாகும். இது தற்போது 8.1 சதவீதமாக உள்ளது மற்றும் வருமான வரிச் சட்டம் , 1961 இன் பிரிவு 80 சி இன் கீழ் வருமான வரி சலுகையை வழங்குகிறது. இத் திட்டத்தில்   வருமானம் கூட வரி விலக்கு பெறுகிறது . ஒரு பெண் பிறந்து 10 வயதாகும் வரை எந்த நேரத்திலும் ஒரு சுகன்யா சம்ரிதி கணக்கு திறக்கப்படலாம் , குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ . 250 ( முன்பு அது ரூ. 1,000). அடுத்தடுத்த ஆண்டுகளில் , நடப்பு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ . 250 மற்றும் அதிகபட்சமாக ரூ . 1.5 லட்சம் டெபாசிட் செய்யலாம் . எந்தவொரு தபால் நிலையத்திலும் அல்லது வணிக வங்கிகளின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளிலும் கணக்கைத் துவங்க முடியும். கணக்கு துவங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகள் அல்லது 18 வயதை எட்டியபின் திருமணமான வரை இந்த சேமிப்பு கணக்கு செயல்படும். திட்டம் துவங்கப்பட்ட ஒரு ஆண்டுகளில் தபால் நிலையங்களின் மூலம் 8 லட்சம் சேமிப்பு...

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக்த்தால் துவங்கப்பட்ட இணைய வாயில்கள்

  PENCIL – குழந்தை தொழிலாளர் பற்றி புகார்கள் தெரிவிக்க உறுவாக்கப்பட்ட இணைய வாயில் (Web Portal) https://pencil.gov.in/ 2.       SHE Box – பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் (Sexual Harassment at Workplace) தொடர்பான புகார்களை பதிவிட உறுவாக்கப்பட்ட இணைய வாயில். http://shebox.nic.in/ 3.       Sakhi – OSC – இந்தியளவிலான ஒருங்கிணைந்த பெண்கள் உதவி மையம் வாயிலாக வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணிநேர உடனடி மற்றும் அவசரகால சேவை வழங்கும் நோக்கம் கொண்டது . https://wcd.nic.in/sites/default/files/WHL_G.pdf 4.       Mahila-E-Haat - பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதிலுமிருந்து வரும் பெண் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோரின் தனித்துவமான பொருட்களுக்கான இணைய வழி சந்தையாக இந்த வாயில் உறுவாக்கப்பட்டது . http://www.nari.nic.in/schemes/online-market-platform-mahila-e-haat

தொழிலளர்கள் நலன் பாதுகாக்க, தற்ப்போது உள்ள திட்டங்கள்

  இந்தியாவில் அமைப்புசாரா துறையை குறைந்துவருவது வளர்ச்சியின் ஒரு "நேர்மறையான" குறி யீடு என்றும் இப்பொது உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்து அரசாங்கம் தகுந்த தரவுகளை தயாரிக்கும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் மாநிலங்களவையில் கடந்த வருடம் (ஜூலை, 2019) தெரிவித்தார் . ஆம், அமைப்புசாரா துறைகளின் இயக்கம் சரியாக கணக்கிடப்படுவதில்லை, இதனால் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி புலப்படவில்லை மற்றொருபுறம், பேரியல் பொருளாதாரத்தின் இயக்கு கருவிகலான நிதி கொள்கையும், பணக் கொள்கையும் செயலற்ற நிலையில் இருக்கிறது. அமைப்புசாரா துறைகள், மக்களுக்கு தன்னாட்சி நிலையை கொடுத்தாலும், அது அவர்களுக்கு தக்க சமூகப்பாதுகாப்பை அளிப்பதில்லை என்பது இந்த கொரானா (COVID-19) நெருக்கடியில் நன்கு தெரிந்தது. பிரதான் மந்திரி வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டம் ( PMRPY ) முயற்சியின் கீழ் , பயனாளிகளைப் பதிவு செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது , கடந்த மூன்று ஆண்டுகளில் 1.2 கோடி ஊழியர்கள் பய னாளிகளாக பதிவு செய்துள்ளனர். பாரளுமன்றத்தில் நிலுவையிலுள்ள அமைப்புசாரா தொழ...

பிரதான் மந்திரி முத்ரா திட்டம் (PMMY)

                 தேசிய (NSSO) கணக்கெடுப்பின்படி (2013) , சுமார் 5.77 கோடி சிறிய (Micro) தொழில் நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ளன , இதில் சுமார் 12 கோடி மக் கள் ஈடுபடுகின்றனர் , இவை பெரும்பாலும் தனிநபர்கள் உரிமையாளர் / சொந்த கணக்கு நிறுவனங்கள். இந்தியாவில் 60% க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியல் சாதி , பட்டியல் பழங்குடி அல்லது பிற பிற்படுத்தப்பட்டவர் களுக்கு சொந்தமானவை . இந்த அலகுகளில் பெரும்பாலானவை முறையான வங்கி அமைப்புகளுக்கு   வெளியே உள்ளன , எனவே அமைப்பு சாரா ஆதாரங்களிலிருந்தே கடன் பெற்வோ அல்லது தன் சொந்தமான நிதி வரம்பைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த இடைவெளியைக் குறைக்க முத்ரா ( MUDRA ) கடன் திட்டம் முன்மொழியப்ப டிருந்தது . நோக்கம்: முத்ரா கடன் திட்டம் ஆர்வமுள்ளவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் நோக்கம் கொண்டது , முதல் தலைமுறை தொழில்முனைவோராக இளைஞர் களை மா ற்ற, சிறு வணிகங்கள் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத் த பெரிதும் உதவுகிறது . முத்ரா கடன்கள் முத்ரா லிமிடெட் அறிவித்த முகமைகளான வங்கிகள் , வங்கி அல...

ஸ்வாமித்வா திட்டம் (SVAMITVA Scheme)

Svamitva ( Ownership )  -  geospatial database of all rural properties (Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) Scheme  ஸ்வாமித்வா திட்டம் (SVAMITVA Scheme) தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். இந்த திட்டம் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தில் (ஏப்ரல் 24) தொடங்கப்பட்டது . நோக்கம்: கிராமப்புற இந்தியாவுக்கு ஒருங்கிணைந்த சொத்து சரிபார்ப்பு தீர்வை வழங்குதல். ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் தொடர் நிலையில் இயங்கும் குறிப்பு நிலையம் ( CORS) ஆகியவற்றைப் பயன்படுத்தி கிராமப்புற மக்கள் வசிக்கும் பகுதிகளில் நிலப் பகுதிகளை வரைபடமாக்கும் திட்டம் இது. 2020 முதல் 2024 வரை நான்கு ஆண்டுகளில் கட்டம் கட்ட மாக நாடு முழுவதும் செய்யப்படும். நன்மைகள்: கிராமப்புறங்களில் திட்டமிடல் மற்றும் வருவாய் வசூலை நெறிப்படுத்துவதற்கும் சொத்துரிமை குறித்த தெளிவை உறுதி செய்வதற்கும் இந்த திட்டம் உதவும் . இந்த திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வரைபடங்களைப் பயன்படுத்தி சிறந்த தரமான கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்...

பிரதம மந்திரி ஏழைகள் நலன் மற்றும் வேலைவாய்ப்பு திட்டம் (Garib Kalyan Rojgar Abhiyaan)

அதிகபட்சமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திரும்பப் பெற்ற பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய ஆறு மாநிலங்களின் 116 மாவட்டங்களில் 125 நாட்களில் 'ஏழைகள் நலன் மற்றும் வேலைவாய்ப்பு திட்டம்' ஒரு முன்னோட்டமாக/ சோதனை திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. கொரோனா நெருக்கடியினால் தொழில்கள் முடங்கியதில் வேலையிழந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிடும் வகையில் ரூ .50,000 கோடி நிதியுடன் இந்த வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை துவங்கி வைத்தப்போது பாரத் பிரதமர் மோடி கூறியதாவது, ”நாடு தழுவிய இந்த முடக்கதினால் (Lockdown), ​​நகரங்களில் இருந்து திறமைகள் கிராமங்களுக்குத் திரும்பியுள்ளது, இது இப்போது கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகின்றேன்” என்றார். இந்த திட்டம் பொது உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்த உதவும். இதில் 25 பணிகள் அடங்கும், குறிப்பாக ஏழைகளுக்கான கிராமப்புற வீட்டுவசதி, தோட்டங்கள், ஜல் ஜீவன் மிஷன் மூலம் குடிநீர் வழங்குதல்...

தன் நிறைவான பாரதத்தை உருவாக்கிடுவோம்!!

 இந்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள். (Schemes & Policies of Government of India) இந்த நிகழ்ச்சி தொகுப்பின் வாயிலாக உங்களுக்கு, இந்திய அரசாங்கத்தின் ஆக்கப்பூர்வமான திட்டங்களையும், நடவடிக்கைகளையும் பற்றியும், எதிர்கால இலட்சிய இலக்குகளை பற்றியும் விரிவாக கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த கட்டுரையில்  அதற்கு தொடர்புடைய இணைய சேவை இனைப்புகளையும், மக்கள் பங்களிப்பின் முக்கிய துவத்தையும், பயன் தரக்கூடிய இன்ன பிற ஆலோசனைகளும், பரிந்துரைகளும் உள்ளது. வளமான பாரதத்தை உறுவாக்கிட பங்களிப்போம். சுய முன்னேற்றம், நாட்டின் முன்னேற்றம். நன்றி!! வாழிய செந்தமிழ்! வாழிய பாரதம்!! வாழிய பாரத மணித் திரு நாடு!!! தன் நிறைவான பாரதத்தை உருவாக்கிடுவோம்!! இந்தியா COVID-19 சூழ்நிலையை துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எதிர்கொண்டவந்தது, இது 2020 மார்ச் மாதத்திற்கு முன்னர் இந்தியாவில் தனிநபர் பாதுகாப்பு கருவிகளின் (PPE) பூஜ்ஜிய உற்பத்தியில் இருந்து, இன்று 2 லட்சம் உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளது என்பதிலேயே தெளிவாகிறது, இந்த உற்பத்தி சீராக வளர்ந்தும் வருகிறது. அதுமட்டும...