Skip to main content

பிரதம மந்திரி ஏழைகள் நலன் மற்றும் வேலைவாய்ப்பு திட்டம் (Garib Kalyan Rojgar Abhiyaan)

அதிகபட்சமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திரும்பப் பெற்ற பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய ஆறு மாநிலங்களின் 116 மாவட்டங்களில் 125 நாட்களில் 'ஏழைகள் நலன் மற்றும் வேலைவாய்ப்பு திட்டம்' ஒரு முன்னோட்டமாக/ சோதனை திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

கொரோனா நெருக்கடியினால் தொழில்கள் முடங்கியதில் வேலையிழந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிடும் வகையில் ரூ .50,000 கோடி நிதியுடன் இந்த வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை துவங்கி வைத்தப்போது பாரத் பிரதமர் மோடி கூறியதாவது, ”நாடு தழுவிய இந்த முடக்கதினால் (Lockdown), ​​நகரங்களில் இருந்து திறமைகள் கிராமங்களுக்குத் திரும்பியுள்ளது, இது இப்போது கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகின்றேன்” என்றார்.

இந்த திட்டம் பொது உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்த உதவும். இதில் 25 பணிகள் அடங்கும், குறிப்பாக ஏழைகளுக்கான கிராமப்புற வீட்டுவசதி, தோட்டங்கள், ஜல் ஜீவன் மிஷன் மூலம் குடிநீர் வழங்குதல், பஞ்சாயத்து பவன்கள், சமூக கழிப்பறைகள், கிராமப்புற மண்டிகள், கிராமப்புற சாலைகள், கால்நடை கொட்டகைகள் மற்றும் அங்கன்வாடி பவன்களை நிர்மாணித்தல் தொடர்பானவை என்று ஊரக அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்து ராஜ், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், சுரங்கங்கள், குடிநீர் மற்றும் சுகாதாரம், சுற்றுச்சூழல், ரயில்வே, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எல்லை சாலைகள், தொலைத்தொடர்பு, மற்றும் விவசாயம், என்று 12 ற்கும் மேற்பட்ட அமைச்சகத்தின் ஒத்துழைப்போடு இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

உத்திர பிரதேசத்தில் உள்ள உன்னாவோ என்ற இடத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் கொரான நெருக்கடியின் போது அங்கு தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழுவினர், அந்த பள்ளியை பழுதுபார்த்து வண்ணம் தீட்டியுள்ளனர், இந்த திட்டத்திற்கான யோசனை இவர்களிடமிருந்தே கிடைத்தது என்று பிரதமர் கூறியிருந்தார்.

விவரம்: http://gkra.nic.in/

மேலும் விவரம்: https://www.pmindia.gov.in/en/news_updates/pm-launches-garib- kalyan-rojgar-abhiyaan-on-20th-june-2020-to-boost-employment-and-livelihood- opportunities-for-migrant-workers-returning-to-villages-in-the-wake-of-covid-19-outbreak/

Comments

Popular posts from this blog

தன் நிறைவான பாரதத்தை உருவாக்கிடுவோம்!!

 இந்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள். (Schemes & Policies of Government of India) இந்த நிகழ்ச்சி தொகுப்பின் வாயிலாக உங்களுக்கு, இந்திய அரசாங்கத்தின் ஆக்கப்பூர்வமான திட்டங்களையும், நடவடிக்கைகளையும் பற்றியும், எதிர்கால இலட்சிய இலக்குகளை பற்றியும் விரிவாக கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த கட்டுரையில்  அதற்கு தொடர்புடைய இணைய சேவை இனைப்புகளையும், மக்கள் பங்களிப்பின் முக்கிய துவத்தையும், பயன் தரக்கூடிய இன்ன பிற ஆலோசனைகளும், பரிந்துரைகளும் உள்ளது. வளமான பாரதத்தை உறுவாக்கிட பங்களிப்போம். சுய முன்னேற்றம், நாட்டின் முன்னேற்றம். நன்றி!! வாழிய செந்தமிழ்! வாழிய பாரதம்!! வாழிய பாரத மணித் திரு நாடு!!! தன் நிறைவான பாரதத்தை உருவாக்கிடுவோம்!! இந்தியா COVID-19 சூழ்நிலையை துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எதிர்கொண்டவந்தது, இது 2020 மார்ச் மாதத்திற்கு முன்னர் இந்தியாவில் தனிநபர் பாதுகாப்பு கருவிகளின் (PPE) பூஜ்ஜிய உற்பத்தியில் இருந்து, இன்று 2 லட்சம் உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளது என்பதிலேயே தெளிவாகிறது, இந்த உற்பத்தி சீராக வளர்ந்தும் வருகிறது. அதுமட்டும...

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக்த்தால் துவங்கப்பட்ட இணைய வாயில்கள்

  PENCIL – குழந்தை தொழிலாளர் பற்றி புகார்கள் தெரிவிக்க உறுவாக்கப்பட்ட இணைய வாயில் (Web Portal) https://pencil.gov.in/ 2.       SHE Box – பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் (Sexual Harassment at Workplace) தொடர்பான புகார்களை பதிவிட உறுவாக்கப்பட்ட இணைய வாயில். http://shebox.nic.in/ 3.       Sakhi – OSC – இந்தியளவிலான ஒருங்கிணைந்த பெண்கள் உதவி மையம் வாயிலாக வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணிநேர உடனடி மற்றும் அவசரகால சேவை வழங்கும் நோக்கம் கொண்டது . https://wcd.nic.in/sites/default/files/WHL_G.pdf 4.       Mahila-E-Haat - பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதிலுமிருந்து வரும் பெண் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோரின் தனித்துவமான பொருட்களுக்கான இணைய வழி சந்தையாக இந்த வாயில் உறுவாக்கப்பட்டது . http://www.nari.nic.in/schemes/online-market-platform-mahila-e-haat

COVID-19: Social Distancing and Educational Distancing

  -------------------------------------------------------------------------------------------- Abstract                 The outbreak of corona virus has created numerous threats and challenges in every sector of the economy. On other hand it had also blessed section of people with wide opportunity and scope to fly beyond horizon. The most benefited of this crisis are those Information Communication Technology (ICT) and Information Technology Enable Service (ITES). Be it Zoom, CISCO’s Webex, Google Meet, demand for their service has increased on every upgraded version of Lockdown in India and across the globe. Education is the key to Human Development, Fuel for the engine of Knowledge Economy. COVID-19 and the Social Distancing norms have changed the routine of our education system. Outbreak of student rebel demanding tuition fee refunding, Institutions focusing on Online mode of teaching, Problem of acco...