சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) என்பது 'பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோ' இயக்கத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட பெண் குழந்தைக்கான ஒரு சிறிய வைப்புத் திட்டமாகும். இது தற்போது 8.1 சதவீதமாக உள்ளது மற்றும் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80 சி இன் கீழ் வருமான வரி சலுகையை வழங்குகிறது. இத் திட்டத்தில் வருமானம் கூட வரி விலக்கு பெறுகிறது.
ஒரு பெண் பிறந்து 10 வயதாகும் வரை எந்த
நேரத்திலும் ஒரு சுகன்யா சம்ரிதி கணக்கு திறக்கப்படலாம், குறைந்தபட்ச வைப்புத்தொகை
ரூ .250 (முன்பு அது ரூ. 1,000). அடுத்தடுத்த ஆண்டுகளில், நடப்பு நிதியாண்டில்
குறைந்தபட்சம் ரூ .250 மற்றும் அதிகபட்சமாக ரூ .1.5 லட்சம் டெபாசிட் செய்யலாம்.
எந்தவொரு தபால் நிலையத்திலும் அல்லது வணிக
வங்கிகளின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளிலும் கணக்கைத் துவங்க முடியும்.
கணக்கு துவங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகள் அல்லது 18 வயதை எட்டியபின்
திருமணமான வரை இந்த சேமிப்பு கணக்கு செயல்படும்.
திட்டம்
துவங்கப்பட்ட ஒரு ஆண்டுகளில் தபால் நிலையங்களின் மூலம் 8 லட்சம் சேமிப்பு கணக்குகளும்,
வணிக வங்கிகள் மூலம் 91 லட்சம் கணக்குகளும் துவங்கப்பட்டுள்ளது. 21 ஜூலை 2017 அன்று
பாராளுமன்றத்தில் நிதி அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தகவல் படி இந்தியா அளவில் 1 கோடியே
13 லட்சம் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது. இதில் அதிகப்படியாகm தமிழகத்தில் 14.4 லட்சம்
கணக்குகளும், இரண்டாவதாக உத்திர பிரதேசம் 12.9 லட்சம் கணக்குகளும் துவங்கப்பட்டுள்ளது.
31.05.2019
வரை இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து நாட்டில் மொத்தம் 1,70,72,858 பெண் குழந்தைகள்
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.
தரவு: http://164.100.24.220/loksabhaquestions/annex/12/AU1138.pdf
மற்றும்: http://164.100.47.194/Loksabha/Questions/QResult15.aspx?qref=5099&lsno=17
மற்றும்: https://www.indiapost.gov.in/VAS/pages/pmodashboard/sukanyasamriddhiaccount.aspx
Comments
Post a Comment